பதிவு செய்த நாள்
11
ஜூன்
2025
04:06
திருப்பதி; திருப்பதியில் நடைபெற்று வரும் ஜேஷ்டாபிஷேகம் விழாவில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன், முத்து கவசம் அணிந்தபடி, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார்.
திருப்பதியில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் 9ம் தேதி துவங்கி இன்று 11ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் 9ம் தேதி துவங்கியது. அன்று உற்சவருக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் அகற்றப்பட்டு யாகம், அபிஷேகம் மற்றும் பஞ்சா மிருதம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. 10ம் தேதி விழாவின் 2ம் நாளில் திருமஞ்சனம் நடைபெற்றது. பின் உற்சவமூர்த்திகளுக்கு முத்து கவசம் சாற்றப்பட்டு நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து சுவாமி அருள்பாலித்தார். இன்று 3வது நாளில் திருமஞ்சனங்கள் முடிந்த பின்னர் மீண்டும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான கூடுதல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.