சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2025 05:06
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 5ல் திருக்கல்யாணம், 6 ல் கழுவன் திருவிழா, 9ல் தேரோட்டம் நடந்தது. ஜூன் 10ம் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நள்ளிரவு 2:00 மணிக்கு மல்லிகை பூக்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பூரணை, புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் ஐயனார் எழுந்தருளினார். விநாயகர் வெள்ளி மூஞ்சிரு வாகனத்திலும், பிடாரி அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். அதிகாலை 4:00 மணிக்கு பூப்பல்லக்கு நான்கு ரத வீதிகளில் வலம் வந்து 5:00 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பல்லக்கில் சாத்தப்பட்டிருந்த மல்லிகை பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அடைக்கலம் காத்த நாட்டார்கள், கிராமத்தினர், தேவஸ்தானத்தினர் செய்திருந்தனர்.