திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2025 11:06
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா இன்று காலை விநாயகர் கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டம் ஜூலை 8ல் நடக்கிறது.
திருநெல்வேலி காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. விழாவின் தொடக்கமாக அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றன. பிரதான கொடிமரத்துக்கு அருகில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு பூஜைகள் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடி மரத்துக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஜூலை 8ல் தேரோட்டம் நடைபெறுகிறது.