மதுரை வீரன், வேட்டைக்காரன் சுவாமி கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2025 12:06
நத்தம்; நத்தம் அருகே சக்கிலியான்கொடை கிராமத்தில் மதுரைவீரன் சுவாமி, வேட்டைக்காரன் சுவாமி, ஆண்டிச்சாமி மற்றும் ஏழு கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் இரவுபிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை மதுரைவீரன் சுவாமி, வேட்டைக்காரன் சுவாமி, ஆண்டிச்சாமி ஏழுகன்னிமார் சுவாமிகள் மற்றும் மதிலை சிலைகள் வர்ணக் குடைகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சக்கிலியான்கொடை ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.