Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியை சுற்றுலா மையமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்; ஜூலை 4ல் பூர்வாங்க பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்; ஜூலை 4ல் பூர்வாங்க பூஜை

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2025
11:06

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக ஜூலை 4ல் பூர்வாங்க பூஜை நடக்கிறது. கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரம், வல்லவ கணபதி விமானம், கோவர்த்தனாம்பிகை விமானம் உள்பட பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் முன்பு யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஜூலை 4ல் பூர்வாங்க பூஜை: காலை 6:30 மணிக்கு மங்களை இசையுடன் துவங்கி யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், அனுமதி பெறுதல், இறை அனுமதி பெறுதல், தனபூஜை, திருமுறை விண்ணப்பம் முடிந்து தீபாராதனை நடக்கும். ஜூலை 5முதல் ஜூலை 9 வரை பூஜை நடக்கிறது. யாகசாலை பூஜை துவக்கம்: ஜூலை 10 மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. ஜூலை 11 காலையில் இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, ஜூலை 12 காலை 4ம் காலை யாக பூஜை, அன்று மாலை 5ம் கால யாக சாலை பூஜை, ஜூலை 13 காலையில் 6ம் கால யாக பூஜையும் மாலையில் 7ம் கால யாக பூஜையும் நடக்கிறது. அன்று இரவு 7:00 மணிக்கு 16 கால் மண்டபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை குன்றத்து சுவாமிகள் வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கும். ஜூலை 14 அதிகாலை 3:45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் முடிந்து 8ம் கால யாக பூஜை பூர்த்தி செய்யப்பட்டு தீபாராதனை நடக்கும். காலை 5:00 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அதிகாலை 5:30 முதல் காலை 6:10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அன்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை வழி அனுப்பும் நிகழ்ச்சி முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், பிரியாவிடை,: கோவர்த்தனாம்பிகை அம்பாள் விதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். ஜூலை 15 முதல் மண்டல பூஜை துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிபெருந்திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சோமவார ... மேலும்
 
temple news
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, நாளை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் அண்ணாமலையார் கோவில் மகா வாராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar