Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனை- 5: அங்கே ... திருப்பதி கோவிலுக்கு 3 கிலோ தங்கம் காணிக்கை! திருப்பதி கோவிலுக்கு 3 கிலோ தங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முக்கோடி தெப்பத்திருவிழா துவக்கம்: கருட சேவை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2012
11:12

கும்பகோணம்: நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் முக்கோடி தெப்பத்திருவிழா துவங்கியதால், நாளை உலக பிரசித்திபெற்ற கல்கருடசேவை நடக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி சமேத சீனிவாசபெருமாள்கோவில் உள்ளது. புகழ்பெற்ற, 108 வைணவ தலங்களில், 20வது தலமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் நாற்பதில், 14வது தலமாகவும் விளங்குகிறது. மணிமுத்தா நதி தீரத்தில் மாதவம் புரிந்த மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை நிறைவேற்ற, அவருக்கு சிறு கன்னியாக வந்து அவதரித்த வஞ்சுளவல்லி தாயாரை, மானிட உருவத்தில் வந்து மனம்கொண்ட சீனிவாசபெருமாள் அதே கோலத்தில் காட்சியளிக்கும் தலமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் முக்கோடி தெப்பத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டும் கொடியேற்றத்துடன் முக்கோடி தெப்பத்திருவிழா துவங்கியது. முன்னதாக பெருமாள் தாயார் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடி மரம் முன்பாக எழுந்தருளினர். பின் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றுவிழா நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான உலக பிரசித்திபெற்ற கல்கருடசேவை நிகழ்ச்சி நாளை நடக்கிறது. ஆண்டுக்கு, இரண்டு முறை மட்டுமே பங்குனி மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் கல்கருடசேவை உலக பிரசித்தி பெற்றது. மூலவராகவும், உற்சவராகவும் அமைந்துள்ள கருடபகவான், நாளை சிறப்பு புஷ்பலங்காரத்தில் நான்கு, ஏட்டு, 16, 32, 64 பேர் படிப்படியாக உயர்ந்து தூக்கி, வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி, பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வருவது போல் கண்கொள்ளாக்காட்சியாக அமைந்திருக்கும். 25ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள, நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில், மகாராஜா மாடசுவாமி, கருப்பசுவாமி, ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சிவன் கோயில்களில் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar