Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கும்பாபிஷேகம்; ... திருப்பரங்குன்றம் கோயில் ராஜகோபுரத்தில் இரும்பு சாரம் அமைக்கும் பணி திருப்பரங்குன்றம் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் தனுஷ்கோடியில் தனுர் பானம் பூஜை
எழுத்தின் அளவு:
சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் தனுஷ்கோடியில் தனுர் பானம் பூஜை

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2025
05:07

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார்.

இன்று காலை 10:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகளுக்கு, கோயில் குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின் சுவாமி சன்னதி கருவறைக்குள் சென்ற சிருங்கேரி சுவாமிகள், சிவலிங்கத்திற்கு மாவு பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால் தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், கங்கை, விபூதியில் அபிஷேகம் செய்து பூஜை செய்து மகா தீபாராதனை நடத்தி சுவாமி தரிசனம் செய்தார். இதன்பின் பர்வதர்த்தினி அம்மன் சன்னதி கருவறை மற்றும் சேதுமாதவர் சன்னதி கருவறைக்குள் சென்று பூஜை செய்து மகாதீபாரதனை நடத்தி சுவாமி தரிசனம் செய்தார். 2:05மணி நேரம் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்த சிருங்கேரி சுவாமிகள் மதியம் 12:35 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டார். பின் சிருங்கேரி மடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மதியம் 3:15 மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்.

தனுர் பானம் பூஜை : ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை 6:30 மணிக்கு சிருங்கேரி சுவாமிகள் புறப்பட்டு தனுஷ்கோடி சென்றார். அங்கு ராமாயண வரலாற்றில், சீதை மீட்க ராமர் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்ற போது கடல் அரசன் வழிவிட மறுக்கிறார். உடனே ராமர் அம்புவில்லை தொடுத்ததும், அச்சமடைந்த கடல் அரசன் ராமர் முன் தோன்றி தாங்கள் அவதார புருஷன் மகாவிஷ்ணு. தற்போது மானிடத்தில் வந்துள்ளீர்கள் ஆகையால் வழிவிடவில்லை என வேண்டிக் கொள்கிறார். இதனால் ஒரு வில், ஒருசொல் எனும் ராமர் கொள்ளைக்கு ஏற்ப தொடுத்த வில்லை எய்து கடல் அரசனுக்கு உணவாக வழங்கிதாக கூறப்படுகிறது. இதனை போற்றும் வகையில் சிருங்கேரி சுவாமிகள், தனுஷ்கோடி கடற்கரை மணலில் வில்அம்பு வரைந்த பூ அலங்காரத்தில் தனுர் பானம் பூஜை செய்து, அதன் மணலை எடுத்து கடலில் கரைத்த பின் புனித நீராடினார். இதன்பின் காலை 8:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த சிருங்கேரி சுவாமிகள், 22வது கோடி தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு மடத்திற்கு சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வஞ்சினிப்பட்டியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar