பதிவு செய்த நாள்
19
டிச
2012
11:12
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், பழனியாண்டவர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை, சங்கமேஸ்வரர் கோவில் பெருமாள் சன்னதி முன் நடந்தது. பவானி கோவில் உதவி ஆணையர் நடராஜன், துணை ஆணையர் வில்வமூர்த்தி, ஊழியர்கள் பங்கேற்று உண்டியல் எண்ணினர். சங்கமேஸ்வரர் கோவிலில், ஏழு லட்சத்து, 78 ஆயிரத்து, 606 ரூபாய் ரொக்கம், பழனியாண்டவர் கோவிலில், 21 ஆயிரத்து, 718 ரூபாய் ரொக்கமும், காசிவிஸ்வநாதர் கோவிலில், நான்காயிரத்து, 636 ரூபாயும், பசு பராமரிப்பு உண்டியலில், 38 ஆயிரத்து, 275 ரூபாயும் இருந்தது. தங்கம் 37 கிராம் (பல மற்று பொன்னிறம்), வெள்ளி, 83 கிராம், வெளிநாட்டு பணமும் இருந்தது. மூன்று கோவில்களிலும் சேர்த்து உண்டியல் மூலம், 8.43 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற வருவாய் கிடைத்தது.