Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரன்குன்றம் கோவிலில் ரூ.60 ... மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கும் காஞ்சி மடாதிபதிகள்; செப்., 7ம் தேதி வரை நடக்கிறது
எழுத்தின் அளவு:
திருப்பதியில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கும் காஞ்சி மடாதிபதிகள்; செப்., 7ம் தேதி வரை நடக்கிறது

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2025
01:07

திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ஸ்ரீ சத்ய சந்திரஸேகரேந்த்ர சரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள் திருப்பதியில், அலிபிரி, ஸ்ரீமஹாபாதுகா மண்டபத்தில் நாளை (10ம் தேதி) துவக்குகின்றனர்.


இந்த பாரத்தேஸம் முழுவதிலும் தர்மத்தை அநுஷ்டித்தும் உபதேளித்தும் காப்பாற்றுவதற்காக பரமேஸ்வரனின் அவதாரமும் ஆசார்யர்களில் சிறந்தவருமான ஸ்ரீ லங்கர பகவத்பாதர்கள் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு காஞ்சீபுர க்ஷேத்ரத்தில் காமகோடி பீடத்தில் ஸர்வஜ்ஞபீடாரோஹணம் செய்து ஸ்ரீமடத்தை நிறுவினார். இப்பீடத்தில் தற்பொழுது 70வது ஆசார்யாளாக ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஸங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ பயங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களும், 71வது ஆசார்யாளாக ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஸத்ய சந்த்ரஸேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸங்கராசார்ய ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். பரமஹம்ஸர்களான இவர்களது வருடாந்தர சாதுர்மாஸ்ய விரதம் வியாச பூஜையில் தொடங்குகிறது. வேதங்களை நான்காக வகுத்தும் ப்ரஹ்மஸூத்ரம், மஹாபாரதம், புராணம் முதலிய நூல்களை தொகுத்தும் நாம் கரையேற வழிவகை செய்த வ்யாஸாசார்யருக்கும், மஹரிஷிகளுக்கும், பூர்வாசார்யர்களுக்கும் நன்றி செலுத்துவதாக அமைவது இப்பூஜை. அது முதலாக இப்புண்ணிய காலத்தில் சிறந்த விரதத்தைக் கடைபிடிக்கும் தவசீலர்களான ஆசார்யர்களை தரிசித்து வணங்கி தொண்டு புரிவதால் பக்தர்களுக்கு மிகுந்த நன்மை உண்டு என்பதில் ஐயமில்லை.


ஆசார்யர்களின் இந்த அனுஷ்டானம் இம்முறை ஸ்ரீமஹாபாதுகா மண்டபம், அலிபிரி, திருப்பதியில் நாளை (ஜூலை-10) ஆஷாட பூர்ணிமையன்று வ்யாஸ பூஜையுடன் தொடங்கி செப்டம்பர்-07ம் தேதி பாத்ரபத பூர்ணிமையன்று விஸ்வரூப யாத்ரையுடன் நிறைவு பெறுகிறது. பவித்ரமான இந்த தருணத்தில் அத்யயன தினங்களில் காலை ஸ்ரீமத் ஸங்கர பாஷ்ய பாடமும் நடக்கும். மேலும் அந்தந்த தருணங்களில் சதுர்வேத பாராயணம், அக்னிஹோத்ர ஸதஸ், பஞ்சாங்க ஸதஸ், பலவித மாஸ்த்ர ஸதஸ்ஸுகள், வேத பாஷ்ய ஸதஸ், அத்வைத வேதாந்த ஸதஸ், உபந்யாஸங்கள், பக்தர் குழாம்களின் சிறப்பு பிக்ஷாவந்தனங்கள் மற்றும் ஸங்கீத வாத்ய நாமஸங்கீர்த்தன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


சாதுர்மாஸ்யத்தின் இடையே 69வது பீடாதிபதிகளான ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ மங்கராசார்ய ஸ்வாமிகளின் 91வது அவதார தின உத்ஸவமும் சிறப்பு பூஜை, ஹோமங்கள், பாராயணங்கள், நாம ஸங்கீர்த்தனங்கள் முதலியவற்றுடன் ஆடி அவிட்ட நக்ஷத்ரத்தன்று (ஆகஸ்ட்10ல்) நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar