திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில் திருப்பணி பாலாலயம்: அமைச்சர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2025 04:07
திட்டக்குடி; ரூ. 1.41 கோடியில் துவங்க உள்ள திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில் திருப்பணி பாலாலயம் நிகழ்ச்சி இன்று நடந்தது.
திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை திருப்பணி செய்ய வேண்டும் என கிராம மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1 கோடியே 41 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 11ம்தேதி முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திருப்பணியை துவக்கி வைத்தார். நேற்று மாலை 6:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால பூஜை; மகாசங்கல்பம், இன்று காலை 8:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால பூஜை, அமைச்சர் கணேசன் முன்னிலையில் நடந்தது. பகல் 11:45 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் மகாதேவி, பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கட்சியினர் உட்பட பலர் பங்கேற்றனர்.