Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி. வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி; ... நெற்றிக்கண் கொண்ட விளமல் மதுரபாஷினி அம்மனுக்கு ஆடி வெள்ளி அபிஷேகம் நெற்றிக்கண் கொண்ட விளமல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்தை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சுமங்கலி பூஜை
எழுத்தின் அளவு:
மந்தை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சுமங்கலி பூஜை

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2025
04:07

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே மந்தை மாரியம்மன் கோவிலில், சுமங்கலி பூஜையும், வெள்ளிக்கிழமை பூஜையும் நடைபெற்றது.


மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதூரில், மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 13ம் ஆண்டு வெள்ளிக்கிழமை பூஜையும், சுமங்கலி பூஜையும் நடந்தது. காலை, 8:00 மணிக்கு கணபதி வேள்வி வழிபாடுடன் பூஜை நடந்தது. பின்பு, 16 வகை வாசனை திரவியங்களால் அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்காரம், பேரொளி வழிபாடும் பூஜையும் நடந்தது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜடையம்பாளையம் புதூர் ஊர் கவுடர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.


மேட்டுப்பாளையம் காட்டூர் ஜெகநாதன் லே அவுட்டில் உள்ள தவிட்டு மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி பூஜை நடந்தது. கோவில் நடை திறந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வளையல்களால், அம்மன் சுவாமிக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்தனர். 24ம் தேதி ஆடி அமாவாசை அபிஷேக அலங்கார பூஜையும், 25ம் தேதி ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை விழாவும், 28ம் தேதி ஆடிப்பூரம் விழாவும், இரவு அம்மன் பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை விழாவும், மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜையும், எட்டாம் தேதி ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமை பூஜையும், அன்று வரலட்சுமி விரதம் பூஜையும், பவுர்ணமி சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. 15ஆம் தேதி ஆடி மாத ஐந்தாம் வெள்ளி அலங்கார பூஜையும், வசந்தம் நகர் ஆதி முனியப்பன் கோவில் இருந்து பால்குடம் எடுத்து வந்து மகா அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற உள்ளது. அன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar