Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூத்தப்பாக்கம் ஆனந்த விநாயகருக்கு ... பெரியகொசப்பள்ளம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா பெரியகொசப்பள்ளம் திரவுபதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான்காம் நுாற்றாண்டு நடுகல் திருவண்ணாமலையில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
நான்காம் நுாற்றாண்டு நடுகல் திருவண்ணாமலையில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2025
01:07

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், மல்லிகாபுரத்தில், நான்காம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டுக்கு அருகில் உள்ள மல்லிகாபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன், தமிழ்செல்வன், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா ஆகியோர், மல்லிகாபுரம் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர்.அங்குள்ள விவசாய நிலத்தில், தலா ஒரு அடி உயரம், அகலம் உள்ள ஐந்து வரி கல்வெட்டை கண்டெடுத்தனர். அதைப் படியெடுத்து, கல்வெட்டறிஞர் ராஜகோபாலுக்கு அனுப்பினர்; அதை படித்த பின், அவர் கூறியதாவது: இதில் உள்ள எழுத்துகள், நான்காம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பிற்கால தமிழி வடிவில் உள்ளன. இதில், ‘கருங்காலி நல்லுாரான் கண்ணந்தைகண் மகன் விண்ணன் ஆன் பூயலுட்பட்டான்’ என எழுதப்பட்டுள்ளது. அதாவது, தற்போதுள்ள கருங்காலிப்பாடியைச் சேர்ந்த விண்ணன் என்பவன், ஆநிறை கவர்ந்த போரில் வீர மரணம் அடைந்துள்ளான். அவனுக்கு, இது நடுகல்லாக எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நடுகல்லில், வீரனின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இதில், தகவல் மட்டுமே உள்ளது. இதுபோல், ஏற்கனவே புலிமான்கோம்பை, பொற்பனைக்கோட்டை, தாதம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கிடைத்துள்ளது. மிகவும் பழமையான இந்த கல்வெட்டை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு. ஆ)ரரர பாதயாத்திரை பக்தர்கள் சாரை சாரையாக வருகின்றனர்.பழநி முருகன் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கந்தசஷ்டி பாடலுக்கு ஏற்ப வள்ளி கும்மி ஆட்டம் ஆடிய கலைஞர்கள், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar