பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜை; பக்தர்கள் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2025 04:07
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இக்கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. ஆனித் திருவிழா ஜூலை 7ல் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் திருவிழா ஜூலை 16 வரை நடந்தது. பத்து நாட்கள் திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனை தரிசனம் செய்தனர். இன்று மறுபூஜையை முன்னிட்டு தீர்த்ததொட்டியில் பக்தர்கள் குவிந்தனர். மேளம், தாளம் இசைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்து ஆடியபடி கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.