திண்டிவனம் சுயம்பு நாக அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2025 04:07
திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில், சுயம்பு நாக அங்காளம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. விழா, கடந்த 17ம் தேதி கொடியற்றுத்துடன் துவங்கியது. நேற்று மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு 7:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் அலகு குத்தி தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் கவுன்சிலர் ராம்குமார் செய்திருந்தார்.