மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல்களால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 03:07
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூர விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதி காலை முலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரம் செய்தனர். உற்சவர் அங்காளம்மனுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனையும், மகாதீபரதனையும் நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல் சந்தானம், மேலாளர் மணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.