Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வி.புத்துார் மாரியம்மன் கோவிலில் ... மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2025
06:07

உத்தமபாளையம்; உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கொண்டாடப்பட்டது


சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த நாளில் ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு நவகலச திருமஞ்சனம், திரவிய அபிஷேகம், புஸ்பாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் நாச்சியாரை தரிசித்தனர். ஆடிப்பூரம் திருவிழா உபயதாரராக இருந்து பழனிவேல்ராஜன், நிர்மலா குடும்பத்தினர் நடத்தினர். ஓம் நமோ நாராயணா பக்த சபையினர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கொண்டாடப்பட்டது. அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் என்பதால் பக்தர்கள் கொடுத்த வளையல்கள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவிக்கப்பட்டு வளையல அலங்காரத்தில் எழுந்தருளினார். ஆண்டிபட்டி: சக்கம்பட்டி நன்மை தருவார் கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயர மாகாளியம்மன் ஆடிப்பூர விழா நடந்தது. விழாவில் மகாளியம்மன், ஆதிபராசக்தி அம்மனுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள், மாங்கல்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்து வன்னியன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி; சிருங்கேரியில் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தின் 33வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆடி மாத ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar