Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ... அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமி சிறப்பு வழிபாடு அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2025
10:07

கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 32ம் ஆண்டு ஆடிக் குண்டம் விழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று மாலை, பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. 30 அடி நீளம், 3 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, பொதுப்பணித்துறை சார்பில் அம்மன் சுவாமி அழைப்பும், அதைத் தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற்றது. இதில் பக்தி ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


குண்டம் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு நான்கு இடங்களில் அன்னதானம் வழங்க, தற்காலிக கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த, நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. நான்கு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு துறையினர் பவானி ஆற்றிலும், குண்டம் அருகேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு, 20 சவர் குளியல் அமைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்க,15 வனப்பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். கோவிலுக்கு வருவதற்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி; சிருங்கேரியில் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தின் 33வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆடி மாத ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar