Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி ... தோஷம் நீங்க பகவதி அம்மனுக்கு செவ்விளக்கு பூஜை : பக்தர்கள் பரவசம் தோஷம் நீங்க பகவதி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் துவங்கியது; மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் துவங்கியது; மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2025
02:08

திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று துவங்கியது.


திருமலையில், ஆண்டுதோறும், 450 உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. அதில், பவித்ரோற்சவம் முக்கியமானது. கோவில் தினசரி பூஜைகளில், ஏதேனும் குறை இருந்தாலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களை அறியாமல் செய்த தவறுகள், அவற்றால் ஏற்பட்ட தோஷங்களை களைய, ஆண்டுதோறும், ஆடி மாதம், பவித்ரோற்சவம் வைகானச ஆகம விதிப்படி கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் கொண்டாடப்படும், பவித்ரோற்சவத்தின் முதல் நாளான இன்று மலையப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.  இந்த நிகழ்வில், ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காலையில் பவித்ர மண்டபத்தில் உள்ள யாகசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஹோமங்கள் மற்றும் பிற வேத சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர், சம்பங்கி பிரகாரத்தில் ஸ்னபன திருமஞ்சனம் விழா நடைபெற்றது. இதில், பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பவித்ர பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் மாலையில், ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயர் சுவாமிகள், கோவில் தலைமை அர்ச்சகர்கள், கோவில் துணை அலுவலர் லோகநாதம், பேஷ்கார் ராமகிருஷ்ணர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. வரும் ... மேலும்
 
temple news
கூடலூர்; கூடலூர் புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவிலில் ஆடி மாதத்தில் குடும்ப தோஷம் நீங்க , நடைபெற்ற ... மேலும்
 
temple news
வாசகர்களே! உங்கள் பகுதியில் உள்ள ஹிந்து கோவில்கள் பற்றிய சிறப்புகளை சேர்க்க இங்கே பதிவு செய்யுங்கள். ... மேலும்
 
temple news
நெகமம்; நெகமம், செட்டியக்காபாளையம் நாகம்மன் கோவிலில் இன்று 5ம் தேதி ஆண்டு விழா நடந்தது.நெகமம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar