தஞ்சாவூர்; தஞ்சாவூரில் சிதா நந்தீஸ்வரர் ரிஷப வாகன திருக்கூட்டம் சார்பில் 4ம் ஆண்டாக ஆடித் தீர்த்தவாரி, ரிஷப வாகன காட்சி திருவிழா நடைபெற்றது, சிவபெருமான் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி வழங்கும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி சிவகணங்கள் இசைக்க கோலாட்டத்துடன் நடைபெற்றது, தஞ்சையின் பிரசித்தி பெற்ற கோவில்களான சிதா நந்தீஸ்வரர் கோவில், நாக நாகேஸ்வரர் கோவில், கேசவதீஸ்வரர் கோவில், திருநீலகண்டர் மடம், மற்றும் பஞ்சநதீஸ்வரர் பாவா மடம் ஆகிய கோவில்களிலிருந்து சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெற்று தஞ்சையின் ராஜ வீதிகளான கீழ ராஜவீதி, மேலராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, வடக்கு ராஜவீதி ஆகிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர், முன்னதாக கீழ ராஜவீதி மாரியம்மன் கோவிலில் பகுதியில் இருந்து, திருவையாறு கட்டளை தம்பிரான் சுவாமிகள், சிவப்பிரகாச அடிகளார் ஆகியோர் கொடியசைத்து சுவாமி புறப்பாட்டை தொடங்கி வைத்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.