சேத்தியாத்தோப்பு தத்துவராய சுவாமி கோவிலில் குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2025 04:08
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு தத்துவராய சுவாமி கோவிலில் குருபூஜை விழா நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் தத்துவராய சுவாமி கோவிலில் குருபூஜையொட்டி சுவாமிக்கு சிறப்பு ஹோமங்கள், புனித நீர் கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பரிவார தெய்வங்கள் விநாயகர், பாலமுருகனுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தத்துவராய சுவாமி அருள்பாலித்தார். கோவில் மடாதிபதி நாராயண தேசிகர் தலைமையிலும், கோவில் நிர்வாகி ராமநாதன் முன்னிலையிலும் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.