Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... சங்கரேஸ்வரர் கோவில் அருகில் 3ம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு சங்கரேஸ்வரர் கோவில் அருகில் 3ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை ஏகாம்பரேஸ்வரருக்கு தங்க கிரீடம்; 21ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சென்னை ஏகாம்பரேஸ்வரருக்கு தங்க கிரீடம்; 21ம் தேதி கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2025
11:08

மின்ட்; ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று பூங்கா நகர் தங்கசாலையில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில். திருமண வரம், வீடு வாங்கும் யோகம் ஆகியவற்றை தருவதால் இக்கோவில் மிகவும் பிரபலம். இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.


இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கடந்த 12ம் தேதி கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. இன்று காலை 7:30 மணிக்கு விசேஷ சந்தி, பாவனாபிஷேகம் சிவப்பு சாத்துப்படி அலங்காரம் 2ம் கால யாகசாலை பூஜை, பாராயணம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, உள்ளிட்டவை நடக்க உள்ளன. இதையொட்டி, முற்பகல் 11:30 மணி மற்றும் மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன. கும்பாபிஷேக தினமான, 21ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, அவபிருத்த யாகம், விசேஷ திரவ்யாஹுதி; 5:45 மற்றும் 7:30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி; காலை 7:45 மணிக்கு யாத்ராதானம், தசதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. இதையடுத்து, காலை 8:15 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.


இதையடுத்து, காலை 9:00 மணிக்கு, விநாயகர், மூலவர், உற்சவர் உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். நண்பகல் 12:30 மணிக்கு, மஹாபிஷேகம் திருப்பாவாடை; இரவு 7:00 மணிக்கு ஏகாம்பரேஸ்வரருக்கும், காமாட்சியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 9:00 மணிக்கு, விசேஷ வாத்தியங்களுடன் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்க உள்ளது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, இறைபணி மன்றமான ஏ.கே.ஏ., அண்டு இ டிவைன் சர்வீஸ் சொசைட்டி மற்றும் கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.


தங்க கிரீடம்; சவுகார்பேட்டை தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்கம் சார்பில், உற்சவமூர்த்திக்கு தங்க கிரீடம்; மூலவர் காமாட்சி அம்மனுக்கு தங்க பந்தனம் என, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் செய்யப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதை சமர்ப்பிக்கும் நிகழ்வு நேற்று காலை நடந்தது. ஆபரணங்கள் மல்லீஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வர ப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்  ஆவணிதிருவிழா 5-ம் திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இன்று அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் அருகே மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.அன்னூர், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar