சதுர்த்தி விழா; சிம்ம வாகனத்தில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2025 11:08
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரிலுள்ள வெயிலுகந்த விநாயகர் கோயில், ஆண்டுதோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. ஆக.18 ல் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. இந்த நிலையில், மூன்றாம் நாள் மண்டகப்படி நிகழ்வாக சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாகச் சென்ற விநாயகருக்கு, பக்தர்கள் தீப ஆராதனை செய்து வழிபாடு செய்தனர். முன்னதாக மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் எட்டாம் நாளான ஆக.25 ல் விநாயகர் திருக்கல்யாணம் நடைபெற்று, ஆக.27 ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.