கோவை; கோவை, சிங்காநல்லூர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் ராஜ அலங்காரத்தில் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆவணி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்பிரமணியர் - மாரியம்மன் கோவிலில் மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.