செப்., 7ல் சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2025 10:08
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் தேதி மதியம் 3.30 மணி முதல் செப்டம்பர் 08 அதிகாலை 3 மணி வரை மூடப்படும்.
பாரம்பரியப்படி, கிரகணம் தொடங்கும் 6 மணி நேரத்திற்கு முன்பே கோவில் மூடப்படும். எனவே செப்டம்பர் 07ம் தேதி மதியம் 3.30 மணிக்கே கோவில் வாசல்கள் மூடப்படும். செப்.,08ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு, சுத்தி மற்றும் புண்யாவசனம் நடைபெறும்.பின்னர் காலை 6 மணிமுதல் பக்தர்களுக்கான தரிசனம் தொடங்கும். செப்., 7ம் தேதி கிரகணத்தையொட்டி ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நாளில் மதியம் 3 மணி முதல் திருமலையில் உள்ள முக்கிய அன்னபிரசாத மையங்களில் அன்னபிரசாத விநியோகம் நிறுத்தப்படும். ஆனால் திருமலையின் அன்னபிரசாத பிரிவு 30,000 புளியோதரைப் பொட்டலங்களை பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் விநியோகிக்கும். செப்டம்பர் 08 காலை 8.30 மணி முதல் அன்னபிரசாத விநியோகம் மீண்டும் தொடங்கும். எனவே, பக்தர்கள் எந்தத் தடங்கலும் ஏற்படாமல் தங்கள் யாத்திரையைத் திட்டமிட்டு செய்வது நன்று.