Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இனிசேரியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு ... மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மல்லப்புரம் பெருமாள் கோயிலில் தாலிகள், உண்டியல் பணம் திருட்டு
எழுத்தின் அளவு:
மல்லப்புரம் பெருமாள் கோயிலில் தாலிகள், உண்டியல் பணம் திருட்டு

பதிவு செய்த நாள்

29 ஆக
2025
03:08

எழுமலை: எம்.கல்லுப்பட்டி அருகே மல்லப்புரம் கிராமத்தில் சுகந்தவனப் பெருமாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஒரு மணிநேரம் திறந்து வழிபாடு நடந்து வருகிறது.


நேற்று முன்தினம் மாலை வழிபாடு முடிந்தபின் நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ், பக்தர்கள் கோயிலைப் பூட்டிச் சென்றனர். நேற்று காலை கோயிலை திறக்கச் சென்ற போது, கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


போலீசார் கோயிலுக்குள் சென்று பார்த்த போது, உண்டியல், பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அலங்கோலமாக சிதறிக் கிடந்தது.


பீரோவில் வைத்திருந்த ஒன்றரைப் பவுன் தாலிகள் 2, உற்ஸவர்கள் கழுத்தில் இருந்த தலா அரைப்பவுன் தாலிச்செயின்கள் 2, என நான்கு பவுன் எடையில் 4 தாலிகள் திருடுபோயிருந்தன. உண்டியல் உடைக்கப்பட்டு ரூ50 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.


மேலும், பீரோவில் இருந்த சுவாமி ஆடைகள், அலங்காரப் பொருட்களை வெளியே இழுத்துப்போட்டுச் சென்றுள்ளனர்.திருடுவதற்கு முன்பு, மர்மநபர்கள் முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பை துண்டித்துள்ளனர். அதன்பின் திருட்டில் ஈடுபட்டதால் கண்காணிப்புக் கேமராக்கள் செயல்படாமல் போனது.


உசிலம்பட்டி டி.எஸ்.பி.,சந்திரசேகரன் தலைமையில் எம். கல்லுப்பட்டி போலீசார், தடயவியல் வல்லுனர்கள் சம்பவ இடத்தில் கைரேகைப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.விசாரணை நடக்கிறது.


* ஆக. 12 இரவில் உசிலம்பட்டி அருகே வாலாந்துார் அங்காளஈஸ்வரி கோயிலிலும் இதே போன்று உண்டியல் உடைத்து திருட்டு நடந்தது.


அதில் ஈடுபட்டோரைக் கண்டுபிடிக்கும் முன்பாக மீண்டும் உசிலம்பட்டி பகுதியிலேயே கோயிலில் திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar