திருப்பதி; திருப்பதி ஏழுமலையானுக்கு மின்சார பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது
இன்றுபுதன்கிழமை காலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்சார பேருந்து நன்கொடை வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஸ்விட்ச் மொபிலிட்டி ஆட்டோமோட்டிவ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் மணி மற்றும் தலைமை வணிக அதிகாரி வெங்கடராமன் ஆகியோர் ரூ. 1.33 கோடி மதிப்புள்ள மின்சார பேருந்தை ஒப்படைத்தனர். இதற்காக, ஸ்ரீவாரி கோயில் முன் கூடுதல் அலுவலர் சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் வாகன சாவி ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீவாரி கோயில் பேஷ்கர் ராமகிருஷ்ணா மற்றும் திருமலை வெங்கடாத்ரி நாயுடு ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.