சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயிலில் செப். 7ல் நடைதிறப்பு நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2025 05:09
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு செப்.7ல் கோயில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் வழக்கமாக மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று மதியம் ஒரு மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். செப். 8 அதிகாலையில் கிரகண பூஜை முடிந்து அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜை நடைபெறும். பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.