ஆற்பாக்கம்; ஆற்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம் கிராமத்தில், திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 2ம் தேதி காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இன்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், 9:00 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். மாலை 4:00 மணிக்கு மஹா அபிேஷகமும், திருக்கல்யாணமும், திருவீதியுலாவும் நடந்தது.