Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் ... கொட்டும் மழையில்  நடனம் ஆடி தஞ்சை பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்திய பக்தர்கள் கொட்டும் மழையில் நடனம் ஆடி தஞ்சை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா விழா; பக்தி பரவசத்துடன் பிருந்தாவனில் காவிரி ஆரத்தி
எழுத்தின் அளவு:
மைசூரு தசரா விழா; பக்தி பரவசத்துடன் பிருந்தாவனில் காவிரி ஆரத்தி

பதிவு செய்த நாள்

26 செப்
2025
11:09

மாண்டியா; மைசூரு தசராவை ஒட்டி, மாண்டியாவின் கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் இன்று முதல் 30ம் தேதி வரை காவிரி ஆரத்தி நடத்தப்பட உள்ளது.


மைசூரு தசராவை ஒட்டி நடக்க உள்ள காவிரி ஆரத்தி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி கே.ஆர்.எஸ்., அணை, பிருந்தாவன் பூங்காக்களில் கூடுதலாக மின்னொளி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் பகுதியில், இன்று மாலை 5:00 மணிக்கு காவிரி ஆரத்தியை துணை முதல்வர் சிவகுமார் துவக்கி வைக்கிறார். ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள், சுத்துார் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், துமகூரு சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள், விஸ்வ ஒக்கலிக மஹாசமஸ்தான மடாதிபதி நிஸ்சலானந்தா சுவாமிகள் உட்பட பல மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். கலாசார நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.


காவிரி ஆரத்தியை, ஸ்ரீரங்கபட்டணா நிமிஷாம்பா கோவில் அர்ச்சகர் தலைமையிலான குழுவினர் நடத்துகின்றனர். மாலை 6:45 முதல் இரவு 7:45 மணி வரை நடக்கும் ஆரத்தியில், 13 பேர் ஆரத்தி நடத்த, அவர்களுக்கு உதவியாக 40 பேர் இருப்பர். காவிரிக்கு சமர்ப்பண பூஜை செய்து, ஸ்ரீ காவிரி ஸ்தோத்திரம் செய்யப்பட்ட பின், காவிரி, விநாயகர், குருவை கவுரவிக்கும் வகையில், ‘வடபதி கணபதிம் பஜே’ பஜனை நடக்கிறது. பின், பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரருக்கு பிரார்த்தனைகளும் சாமர சேவையும் நடக்கிறது. இந்நிகழ்ச்சி, ‘துாப ஆரத்தி’, ‘மந்த்ரோச்சரணே’, ‘புஷ்பார்ச்சனை’ என, ‘கும்ப ஆரத்தி’, ‘நாக ஆரத்தி’, ‘காவிரி’ ஆரத்தி என சங்கு முழங்குவதுடன் நிறைவடையும். நவராத்திரி துவக்கத்தை குறிக்கும் வகையில், கே.ஆர்.எஸ்., அணை, கண்கவர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இந்த மின் அலங்காரம் தினமும் மாலை 6:45 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஒளிரும். இன்று முதல் தினமும் இரவு 8:00 முதல் 9:30 மணி வரை கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும். பிருந்தாவன் பூங்காவினுள் செல்ல இரவு 9:30 மணி வரை டிக்கெட் வழங்கப்படும். கே.ஆர்.எஸ்., அணையின் தெற்கு, வடக்கு நுழைவு வாயில்கள், நடைபாதைகள், அணையின் மேல் பகுதி, பெலகோலா காகித ஆலை சதுக்கத்தில் இருந்து கே.எஸ்.ஆர்., அணை வரையிலான சாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்;  நவராத்திரி விழாவை முன்னிட்டு இடி - மின்னலுடன் மழை பெய்த போதும் நிறுத்தாமல் பரதம் ஆடி, ... மேலும்
 
temple news
சென்னை; தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் கோவில் நவராத்திரி விழா மூன்றாம் நாளில் நந்தினி ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு, சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
திருமுக்கூடல்; திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், சேதம் அடைந்துள்ள கொடிமரத்தை மாற்ற ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கடந் 22ம் தேதி தொடங்கியது. வரும் அக்.1ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar