மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2025 05:09
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு தினமும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வருகின்றனர். ஐந்தாம் நாள் விழாவான இன்று ரூபாய் நோட்டுக்களால் மகாலட்சுமி அலங்காரம் செய்திருந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, தலைமை பூசாரி பரமசிவம், அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.