Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜகீழ்ப்பாக்கம் நவராத்திரி ... காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி சிறப்பு வழிபாடு காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு; களை கட்டும் மலைக்கோவில்கள்
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு;  களை கட்டும் மலைக்கோவில்கள்

பதிவு செய்த நாள்

26 செப்
2025
06:09

உடுமலை; பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய புரட்டாசி சனிக்கிழமைகளில், உடுமலை சுற்றுப்பகுதி மலைக்கோவில்களில், பாரம்பரிய வழிபாடு நடத்தும் மக்களால், அக்கோவில்கள் களைகட்டியுள்ளது; இரண்டாவது சனிக்கிழமை வழிபாட்டுக்கு கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலும், சில கிராமங்களிலுள்ள குன்றுகளில் மலைக்கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. புரட்டாசி பிறந்ததும், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு இப்பகுதி மக்கள் உற்சாகமாக செல்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமே, இக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியில், மலைகளை கடந்து சென்று, ஏழுமலையானை தரிசித்தால், அவல், கரும்பு சர்க்கரை தண்ணீரை நனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். பாரம்பரியமான ஏழுமலையான் கோவில் வழிபாடு, இன்றளவும் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் சிறப்பாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதே போல், கரட்டுமடம் சஞ்சீவராய பெருமாள் கோவில்; ஜல்லிபட்டி அழகு திருமலைராய பெருமாள், செஞ்சேரிமலை சுந்தரராஜ பெருமாள், திருமூர்த்திமலை கரிவரதராஜ பெருமாள் என உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோவில்களில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, இன்று பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மேல்கோட்டை ஸ்ரீ ஆச்சார்யா வேதபாட சாலை பொறுப்பாளர் ஆறுமுகம் கூறியதாவது: உடுமலை சுற்றுப்பகுதியில், பல மலைக்கோவில்கள் அமைந்துள்ளன. பழமை வாய்ந்த இக்கோவில்களில் தற்போது வரை புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடைபெற்று வருகிறது. தாசர்கள் சங்குநாதம் பிடித்து நம்மை வாழ்த்துகிற முறையும் பின்பற்றப்படுகிறது. கிராமங்களில், குழந்தைகளுக்கு திருநாமம் இட்டு, கையில் செம்பு கொடுத்து, நாராயண மூர்த்தி என்கிற உஞ்ச விருத்தி எடுத்து வரச்செய்கின்றனர். அந்த அரிசியில் சாதம் வடித்து பிரசாதமாக வழங்குகின்றனர். பின்னர், பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்கின்றனர்; பஜனை பாடல்களை பாடியவாறு ஊர்வலமும் வருகின்றனர். இவ்வாறு, புரட்டாசி மாதம் முழுவதும் பாரம்பரிய வழிபாடுகள் இன்றும் தொடர்கிறது. இவ்வாறு, தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூரில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது; வடமாநில மக்களும், தங்கள் பாரம்பரிய ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: உலகத்தை படைக்க கடவுள் விரும்பியபோது இச்சை என்ற சக்தியும் ஞானசக்தியும் தோன்றின. பின் ... மேலும்
 
temple news
நவராத்திரி கொலு மிக விசேஷமாக கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. பல ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சங்கர மடத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மிணி மூலவருக்கு இன்று (28ம் தேதி) சஹஸ்ரநாம ... மேலும்
 
temple news
புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நடை பெற்று வரும் நவராத்திரி பூஜையில், அம்மன் நேற்று மயூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar