Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவிட்டல் ருக்மணி மூலவருக்கு ... ஹிந்து பண்டிகைகளில் நன்மை தரும் நவராத்திரி தர்மம் காக்கும் தாயை தரிசனம் கண்டால் போதும் ஹிந்து பண்டிகைகளில் நன்மை தரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
100 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ராமர் பட்டாபிஷேக கொலு பொம்மைகள்
எழுத்தின் அளவு:
100 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ராமர் பட்டாபிஷேக கொலு பொம்மைகள்

பதிவு செய்த நாள்

28 செப்
2025
01:09

நவராத்திரி கொலு மிக விசேஷமாக கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. பல நுாற்றாண்டு காலமாக கொலு வைக்கும் பழக்கம் புதுச்சேரியில் இருந்ததற்கான அடையாளமாக, புதுச்சேரி, துய்மா வீதியில் உள்ள எக்கோல் பிரான்ஸ்சே எக்ஸ்ட்ரீம் ஓரியண்ட் பிரெஞ்சு கல்வி நிறுவனத்தில் நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் பட்டாபிஷேக கொலு பொம்மைகள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


இதில், ராமர், சீதா, விசுவாமித்திரர், ஆஞ்சநேயர், நாரதர் உள்ளிட்டவர்களின் சிறிய அளவிலான பொம்மைகள் மிக ரசனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் களிமண்ணால் செய்து, பின் தீயில் சுடப்பட்டு, இலை, தழைகளில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கை வண்ணங்கள் பூசப்பட்டுள்ளது.


இந்த பொம்மைகள் புதுச்சேரி குயவர்பாளையத்தில் வசித்த வைத்தி (பத்தர்) பொற்கொல்லர் என்பவர் வீட்டில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன், கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் குயவர்கள் என்று அழைக்கப்படும் மண்பாண்ட கலைஞர்கள் அதிகமாக வசித்ததால், காராமணிகுப்பத்தை (போன்கரே வீதி) சின்ன குயவர்பாளையம், தற்போது லெனின் வீதி என்று அழைக்கப்படும் பகுதியை பெரிய குயவர்பாளையம் என்று பிரெஞ்சு ஆட்சியாளர்கள் வகைப்படுத்தி உள்ளனர்.


மேலும் இந்த மண்பாண்டக் கலைஞர்களில் திறமையானவர்களை கண்டறிந்து பிரெஞ்சு அதிகாரிகள் மிகுந்த மரியாதையுடன் நடத்தி, தங்களுக்கு தேவையான மண்பாண்ட பொருட்களை செய்து வாங்கியுள்ளதாக வர லாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.


இதுமட்டுமின்றி ஏராளமான வெண்கலம் மற்றும் பித்தளை சிலைகள் மற்றும் பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar