திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் சத சண்டியாக பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2025 10:09
அவிநாசி; திருமுருகன்பூண்டி ஸ்ரீ திருமுருகநாத சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சத சண்டியாக பெருவிழா நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி ஸ்ரீ முயங்கு பூண்முலை வல்லியம்பிகை உடனமர் ஸ்ரீ திருமுருகநாதசுவாமி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சத சண்டியாக பெருவிழா நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை,தேவி மகாத்மிய பாராயணம், பிராயச்சித்த அஸ்திர ஹோமங்கள், கலச புறப்பாடு,அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் ஸ்ரீ ஆலிங்க பூசண ஸ்தானாம்பிகை திருவீதி உலா, அம்பு சேர்வை ஆகியவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.