Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ... கும்பாபிஷேகம் நடந்து 8 மாதங்களில் உடைந்த கோவில் கலசங்கள் கும்பாபிஷேகம் நடந்து 8 மாதங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்; சப்பரங்கள் அணிவகுப்பு
எழுத்தின் அளவு:
குலசையில் தசரா விழா கோலாகலம்; சப்பரங்கள் அணிவகுப்பு

பதிவு செய்த நாள்

04 அக்
2025
10:10

துாத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடந்த மகிஷா சூரசம்ஹாரத்தில், 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.


துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா, செப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்களாக, தினமும் இரவில், பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காப்பு கட்டி, விரதம் இருந்த பக்தர்கள் வேடமணிந்து, முத்தாரம்மனை வழிபட்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு நடந்தது. இதற்காக, சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன் முத்தாரம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் வெள்ளத்தில், சிம்ம வாகனத்தில் அம்பாள் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் கடற்கரைவந்தடைந்தார். முதலில், தன்முகமாக வந்த மகிஷாசுரனை வதம் செய்த முத்தாரம்மன், அடுத்ததாக சிங்க முகத்துடனும், எருது முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்தார். அடுத்து சேவல் உருவில் வந்த மகிஷாசூரனையும் வதம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘ஓம் காளி, ஜெய் காளி’ என கோஷம் எழுப்பினர். 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதே போன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் ராமசாமி கோவில் திடலில் நடந்த தசரா விழாவில், பல்வேறு அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுத்து வந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar