புவனகிரி; புவனகிரி வெள்ளியம்பலம் சுவாமிகள் மடத்தில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. புவனகிரி வெள்ளியம்பலம் சுவாமிகள் மடத்தில் மீனாட்சி அம்மன் சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, மீனாட்சி அம்மன் சமேத சோமசுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மூலவர் அம்மன் லட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரத்தினசுப்ரமணியர் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.