Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மது பழக்கத்தை மறக்கடிக்கும் ... புலியும், பசுவும் ஒன்றாக சுற்றி திரிந்த தலம் புட்டிகே ஸ்ரீசோமநாதேஸ்வரர் கோவில் புலியும், பசுவும் ஒன்றாக சுற்றி ...
முதல் பக்கம் » துளிகள்
வீட்டிற்கு பாம்பு வராமல் தடுக்கும் கோவில்
எழுத்தின் அளவு:
வீட்டிற்கு பாம்பு வராமல் தடுக்கும் கோவில்

பதிவு செய்த நாள்

14 அக்
2025
01:10

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வர். அதிலும் நாக பாம்பு பெயரை கேட்டாலே மக்கள் அஞ்சி நடுங்குவர்.


பாம்பு துரத்துவது, கொத்துவது போன்று கனவு கண்டால் ஏதோ கெட்டது நடக்க போவதாக மக்கள் பயப்படுவது இயல்பு. இதுபோல வீட்டின் அருகே அடிக்கடி பாம்பு சுற்றி திரிந்தால், அந்த பாம்பால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்றும் நினைப்பர். வீட்டின் அருகிலோ அல்லது வீட்டிற்குள்ளோ பாம்பு வராமல் தடுக்க ஒரு கோவில் உள்ளது.


பெலகாவியின் அதானி தாலுகா, அல்லுட்டி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பயலிங்கேஸ்வரர் கோவில். நாகலிங்கத்திற்கு இந்த கோவில் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.


வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலோ, வீட்டிற்குள்ளோ பாம்பு சுற்றி திரிவதை கண்டால், வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி மணலை இந்த கோவிலுக்கு எடுத்து வந்து, நாக சிலை முன் வைத்து வழிபட்டு மணலை வீட்டிற்கு எடுத்துச் சென்று, பாம்பு தோன்றிய இடத்தில் வைத்தால் மீண்டும் பாம்பு வராது என்று நம்பப்படுகிறது.


இக்கோவிலில், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதுபோல ஆண்டிற்கு ஒரு முறை விஜ்ரும்பன என்ற பெயரில் விழா நடக்கிறது. இதில் அதானி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களும், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் பங்கேற்கின்றனர்.


நாக சிலை முன்பு வைத்து வழிபடும் மணலை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டால், பாம்பு மீண்டும் வராமல் இருப்பது எப்படி என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இதனால், இக்கோவிலை மர்ம கோவிலாகவே பக்தர்கள் பார்க்கின்றனர்.


கோவிலின் நடை தினமும் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து அதானி, 600 கி.மீ., துாரத்தில் உள்ளது.பஸ், ரயில், விமான சேவைகள் உள்ளன.

 
மேலும் துளிகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில் உள்ள முக்கிய தெய்வங்களில் ஒருவர் மஹாலட்சுமி. இவரை வணங்கினால் செல்வ வளம் கொழிக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar