Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் ரோப் கார் ... சுசீந்திரம் தாணுமாலையர் கோயில் தெப்பம் சுவர் இடிந்தது சுசீந்திரம் தாணுமாலையர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிதி ஒதுக்கியும் திருப்பணிகள் துவங்காமல் சிதிலமடையும் முருகன் கோயில்
எழுத்தின் அளவு:
நிதி ஒதுக்கியும் திருப்பணிகள் துவங்காமல் சிதிலமடையும் முருகன் கோயில்

பதிவு செய்த நாள்

14 நவ
2025
08:11

விருதுநகர்: விருதுநகரில் சிதிலமடையும் நிலையில் உள்ள பழமையான எல்லிங்கநாயக்கன்பட்டி முருகன் கோயிலுக்கு கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணி திட்டத்தில் நிதி ஒதுக்கியும், அறநிலையத்துறை தற்போது வரை பணிகளை துவக்காமல் உள்ளது.


விருதுநகரில் செங்குன்றாபுரத்தை அடுத்து எல்லிங்கநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஹிந்து சமயஅறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான குமரன் என்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது வரகுண பாண்டியன் காலத்து கோயில் என அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.


திருப்புகழில் செங்குன்றாபுரம் வாழ் குமரா எனும் முருகோனே என முருகனை புகழ்ந்து பாடும் வரி உள்ளது. செங்குன்றாபுரத்தில வாழ்கிறவரும், வாலிபன் என அழைக்கப்படுவருமாகிய முருகபெருமானே என்று அதற்கு பொருள்படும். விளக்கவுரையில் செங்குன்றாபுரம் குமரகுளம் கண்மாய் கரையில் குமரனாக வீற்றிருக்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது கூடுதல் தகவல். செங்குன்றாபுரம் அருகில் இந்த முருகன் கோயில் மட்டுமே உள்ளது. மேலும் கண்மாய் கரையிலும் இந்த முருகன் கோயில் தான் உள்ளது.ஆதலால் இக்கோயில் தான் திருப்புகழில் கூறப்பட்ட கோயில் என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். இக்கோயிலில் கல்வெட்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொல்லியல் ஆய்வறிஞர்கள் கோயிலை ஆய்வு செய்துள்ளனர். கோயில் பழமையான கல் கட்டடம் என்பதால் விமானம், சுற்றுச்சுவர் ஆகியவை சேதமடைந்துள்ளன. மேலும் வளாகத்திற்குள் மரங்கள் அதிகளவில் வளர்ந்து பராமரிப்பின்றி காணப்படுகின்றன. ஆகவே அறநிலையத்துறையினர் பழமையான இந்த முருகன் கோயிலை பராமரித்து புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் இதற்கு ரூ.ஒன்றரை கோடிக்கு திட்ட மதிப்பீடு வரைவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. அதே நேரம் கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிகள் திட்டத்தில் ரூ.2.5 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் கோயிலின் வெளிப்புற தளம் அமைக்கப்பட உள்ளது.


இதற்காக கிராவல் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. இது 2024– 25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி. இன்னும் பணிகளை முடிக்காமல் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் தாமதம் செய்து வருகின்றனர். எனவே விரைந்து திருப்பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar