Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மும்பை சித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வாழ்த்து சொல்லி பிளக்ஸ் வைத்த முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வாழ்த்து சொல்லி பிளக்ஸ் வைத்த முஸ்லிம்கள்

பதிவு செய்த நாள்

28 நவ
2025
11:11

அவிநாசி; மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம்கள் இணைந்து சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களை வரவேற்று வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.


சேவூரில் 1300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் வரும் 30ம் தேதி கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறுகிறது. இதற்காக மத ஒற்றுமையும், மனித நேயத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று வாழ்த்து பேனர் முஸ்லிம் சகோதரர்கள் சார்பில் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் திருப்பணி குழுவினர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை பள்ளிவாசல் ஜமாத்தாரர்களிடம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சமூக நல்லிணக்கம், மனித நேயம் ஓங்க அனைவரும் பள்ளிவாசலில் துவா செய்தனர். சேவூர் ஏரிமேடு சின்ன பள்ளிவாசல் மற்றும் வடக்கு வீதி பெரிய பள்ளிவாசல் ஆகிய இஸ்லாமிய சகோதரர்கள் இணைந்து கும்பாபிஷேக விழா சிறக்கவும், பக்தர்களை வரவேற்றும் வாழ்த்து சொல்லி கைகாட்டி ரவுண்டானா பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். 1300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வாழ்த்து சொல்லி,மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம்கள் பிளக்ஸ் பேனர் வைத்த செயல் பக்தர்களை நெகிழ செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ சித்தி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டு உள்ள, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar