Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் ... தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகத்திற்கு செல்ல பக்தர்களுக்கு தடை தேவிபட்டினம் நவபாஷாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நம்பாதவர்களுக்கும் வாய்ப்பை வழங்கும் சனாதன தர்மம்; சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு
எழுத்தின் அளவு:
நம்பாதவர்களுக்கும் வாய்ப்பை வழங்கும் சனாதன தர்மம்; சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு

பதிவு செய்த நாள்

29 நவ
2025
10:11

டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த 26ம் தேதி சுப்ரமணிய சஷ்டி பூஜையை, நொய்டாவில் உள்ள ஸ்ரீவிநாயக கார்த்திகேயர் கோவிலில் நிகழ்த்தினார். அப்போது, அவர் ஆற்றிய அருளுரை:


அளவிட முடியாத சனாதன தர்மத்தில் உள்ள இரண்டு முக்கியமான கூறுகளை கவனிக்க வேண்டும். பவுதிக அறிவு ஒரு குறிப்பிட்ட அளவே உடன் வரும். இறுதியில், அது அந்த நபருடனேயே மரித்து விடும். ஆனால், சனாதன தர்மம் ஒவ்வொருவருக்கும், தர்மத்தையும், புண்ணியத்தையும் அடுத்த பிறவிக்கு எடுத்துச் சென்று, ஏதோ ஒரு பிறவியில் மோட்சமடைய வழிவகுக்கிறது. இரண்டாவதாக, சனாதன தர்மம் குருட்டு நம்பிக்கை அல்ல; நம்பாதவர்களுக்கும், சந்தேகம் உள்ளவர்களுக்கும் கூட வாய்ப்பை வழங்கியுள்ளது. நம் தர்மமே, அவர்கள் சார்பாக சந்தேகங்களை எழுப்பி, அதற்கு முழுமையான பதில்களையும் அளிக்கிறது. குழந்தைகள், பள்ளியை விட விளையாட்டிலேயே நாட்டம் கொள்கின்றனர். அவர்கள் விளையாட விரும்புவதாலும், பள்ளிக்கு செல்ல விரும்பாததாலும், அவர்களின் விருப்பத்தை பெற்றோர் நிறைவேற்றலாமா? அப்படி செய்தால், அது நன்மை செய்யாது. எனவே, பெற்றோர் என்ன செய்கின்றனர்? அவர்களுக்கு பிடித்த வேறு ஏதோ ஒன்றை காட்டி, குழந்தைகளை சமாதானப்படுத்தி பள்ளிக்கு செல்ல வைக்கின்றனர். குழந்தைகள் வளர வளர, கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்கின்றனர். சாஸ்திரங்களும் இதே விதியை பின்பற்றுகின்றன. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில், துவக்கத்திலேயே வெளிப்படுத்த முடியாது. பயிற்சியற்ற அல்லது பக்குவப்படாத மனித மனத்தால், அனைத்தையும் புரிந்து கொள்ளவோ அல்லது உள்வாங்கவோ இயலாது. எனவே, பெற்றோரும், மூத்தோரும் தளராமல், குழந்தைகளை தர்ம நெறிகளில் ஈடுபடுத்துவது அவசியம். இவ்வாறு சிருங்கேரி ஜகத்குரு உரையாற்றினார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar