Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 19 ஆண்டுகளுக்கு பின் பக்தி பரவசத்தில் ... வித்தியாச வழிபாட்டு முறை; ஹனுமனை கிராம தெய்வமாக வணங்கும் மக்கள் வித்தியாச வழிபாட்டு முறை; ஹனுமனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகதளா ஹெத்தைக்காரர்கள் நடைபயணம் தும்மனட்டி கிராமத்தில் வரவேற்பு
எழுத்தின் அளவு:
ஜெகதளா ஹெத்தைக்காரர்கள் நடைபயணம் தும்மனட்டி கிராமத்தில் வரவேற்பு

பதிவு செய்த நாள்

09 டிச
2025
11:12

குன்னுார்: ஜெகதளா ஹெத்தையம்மன், திருவிழாவின் ஒருபகுதியாக, நடைபயணம் மேற்கொண்டுள்ள ஹெத்தைக்காரர்களுக்கு தும்மனட்டி கிராமத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழாவை, 48 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு, காரக்கொரை, ஓதனட்டி, மஞ்சிதளா, பேரட்டி, மல்லிக் கொரை, பெரிய பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய, 8 ஹட்டிகளின், ஹெத்தை திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இந்த ஹட்டிகளை சேர்ந்தவர்கள், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு தாய் வீடு என அழைக்கப்படும் கொதுமுடி கிராமத்திற்கு நடைபயணம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இந்த குழுவினர் தும்மனட்டி கிராமத்தை அடைந்தனர். ஊர் தலைவர் கண்ணன் தலைமையில் ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தும்மனட்டி சத்ய சாயி சேவா சமிதி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஹெத்தை அம்மன் பாடல்கள், பாபா பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து பூஜைகள் நாராயண சேவை நடந்தது. தும்மனட்டி மாரியம்மன் கோவிலில் ஆடல் பாடல்களுடன், பஜனை அருள்வாக்கு கூறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மடித்தொரை கிராமத்திற்கு சென்ற ஹெத்தைக்காரர்கள் அருள்வாக்கு கூறினர். தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ஜன., 9ல் கோவிலில், குண்டம் இறங்குகின்றனர். 12ம் தேதி ஜெகதளாவில் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை ... மேலும்
 
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar