Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெகதளா ஹெத்தைக்காரர்கள் நடைபயணம் ... திருப்புத்தூரில் சிதம்பர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திருப்புத்தூரில் சிதம்பர விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வித்தியாச வழிபாட்டு முறை; ஹனுமனை கிராம தெய்வமாக வணங்கும் மக்கள்
எழுத்தின் அளவு:
வித்தியாச வழிபாட்டு முறை; ஹனுமனை கிராம தெய்வமாக வணங்கும் மக்கள்

பதிவு செய்த நாள்

09 டிச
2025
11:12

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பியில் துளு மொழி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இரட்டை மாவட்ட மக்கள், தங்கள் பகுதியை துளு நாடு என்றே கூறுகின்றனர். கர்நாடகாவின் மற்ற மாவட்டங்களை காட்டிலும், கடலோர மாவட்டங்களில் தெய்வ வழிபாட்டு முறை சற்று வித்தியாசமாகவே இருக்கும். இங்கு நடக்கும் பூதகோல நடனம் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.


தட்சிண கன்னடாவின் புத்துார் தாலுகா, இலிந்ததே கிராமத்தின் ஹனுமனை தங்கள் கிராம தெய்வமாக வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக உள்ளது. ஆண்டிற்கு ஒரு முறை, ‘ஹனுமன் கோல’ என்ற பெயரில் திருவிழா நடத்துகின்றனர். திருவிழாவின் போது வீட்டிற்கு ஒருவர் ஹனுமன் வேடம் அணிந்து விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். திருவிழாவுக்கு முந்தைய நாள் வரை யாரிடமும் பேச முடியாது. திருவிழாவின் போது மேள தாளங்கள் எதுவும் இல்லை. திருவிழா நடக்கும் இடமே மிகவும் அமைதியாக இருக்கும். ஹனுமன் வேடமிட்டு வருவோர் துள்ளி குதித்து வருகின்றனர். அப்போதும் கூட யாருமே பேச கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஹனுமன் வேடம் அணிவோர் தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறித்து மக்களுக்கு கொடுக்கும் நடைமுறையும் உள்ளது. வாழை, பாக்குகளும் படைக்கப்படுகின்றன. விவசாயத்திற்கு குரங்குகள் அச்சுறுத்தல் இருக்க கூடாது என்பதற்காக, பாரம்பரிய திருவிழாவை நடத்துவதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். ஹனுமன் வேடம் அணிவோர் முகத்தில் கருப்பு மை பூசுவதுடன், கருப்பு உடை, வெள்ளை நிற பேன்ட், காலில் சலங்கை அணிந்து கொண்டு நடனமாடுவது துளு மக்களின் கலாசாரத்தை எடுத்து காட்டுகிறது.


எப்படி செல்வது?: பெங்களூரில் இருந்து புத்துார் 314 கி.மீ.,யில் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து அரசு பஸ்கள் உள்ளன. ரயிலில் சென்றால் பண்ட்வால், மங் களூரில் இறங்கி செல்ல வேண்டும். – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar