Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹிந்து சமுதாயத்தை உணர்வுள்ள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் இடத்தில் பறக்கும் கொடி திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சை
எழுத்தின் அளவு:
கோவில் இடத்தில் பறக்கும் கொடி திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சை

பதிவு செய்த நாள்

10 டிச
2025
11:12

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலையில், கோவில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், பிறை நிலா போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற, சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்திடம், ஹிந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்தனர்.


ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன் அளித்தமனு: கோவில் மலை மீது பழமையான தலைவிரிச்சான் மரம் என்று அழைக்கப்படும் கல்லத்தி மரம் உள்ளது. இங்கிருந்து, 100 மீட்டருக்கு மேல் தர்கா உள்ளது. சந்தனக்கூடு விழாவின்போது, ஆண்டுக்கு ஒருமுறை தர்காவுக்கு உள்ளே உள்ள கொடிமரத்தில் தான் பிறை நிலா போட்ட சிவப்புக்கொடி ஏற்றப்படும். தற்போது, கல்லத்தி மரத்திலும் பிறை நிலா போட்ட கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், மகா தீபம் ஏற்ற ஆட்சேபனை தெரிவிக்காத தர்கா நிர்வாகத்திற்கு கட்சி சார்பில் நன்றி. அதே சமயம், கோவில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு தர்கா நிர்வாகம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. டிச., 21ல் சந்தனக்கூடு விழாவில் கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை இறக்கி மீண்டும் ஏற்ற, தர்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதை காரணம் காட்டி, மரமும் தர்கா நிர்வாகத்திற்கு சொந்தம் என உரிமை கொண்டாடும் விதமாக வருங்காலத்தில் சர்ச்சையாகவும், பிரச்னையாகவும் மாற வாய்ப்புள்ளது. எனவே கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை துவக்க நிலையில் உடனே அகற்ற வேண்டும். மரத்தில் சேவல் படம் போட்ட கொடியை ஏற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில், ஆயில்யம் நட்சத்திர ... மேலும்
 
temple news
கோவை; கவுண்டம்பாளையம் சரவணா நகர் சபரி கார்டனில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதர் வீரமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar