Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சியில் மஹா சுவாமிகள் ஆராதனை ... படப்பை கல்யாண சீனிவாச பெருமாள் கோவில் வனபோஜனம் உத்சவம் படப்பை கல்யாண சீனிவாச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் பஞ்சலோகத் திருமேனிகள் அர்ப்பணிப்பு
எழுத்தின் அளவு:
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் பஞ்சலோகத் திருமேனிகள் அர்ப்பணிப்பு

பதிவு செய்த நாள்

15 டிச
2025
10:12

திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு, பூஜிக்கப்பட்ட 63 நாயன்மார்களின் பஞ்சலோகத் திருமேனிகள் நேற்று அர்ப்பணிக்கப்பட்டன.


திருப்பூர், கொங்கு குலால உடையார் அறக்கட்டளை ஏற்பாட்டில் 60 உபயதாரர்கள் கொண்டு 63 நாயன்மார்களின் பஞ்சலோகத் திருமேனிகள் உருவாக்கப்பட்டன. இவற்றுக்கு 25 வாரங்கள் தேவாரம், திருவாசகம் முற்றோதல் செய்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இவற்றை விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, தாராபுரம் ரோடு, கோட்டை மாகாளியம்மன் கோவிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்து, திருவீதியுலா துவங்கியது. முக்கிய ரோடுகள் வழியாக சிவனடியார்கள், உபயதாரர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் இவற்றை விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு சமய பெரியோர்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் முன்னிலையில் திருமேனிகளுக்கு சிறப்பு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள், அறநிலையத் துறையினர் அவற்றைப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள், பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தென் சேரிமலை ஆதினம் முத்துசிவ ராமசாமி அடிகளார், பவானி தியாகராசர் ஆகியோர் அருளாசி வழங்கினர். தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்ரமணியம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சங்குராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை கொங்கு குலாலர் அறக்கட்டளை நிர்வாகிகள் தட்சிணா மூர்த்தி, லட்சுமி நாராயணன், சுந்தரராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar