Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மார்கழி வழிபாடு; ... ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் டிச.26ல் திருக்கல்யாணம் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடியில் டிச.19ல் அனுமன் ஜெயந்தி; 2,000 லிட்டர் பாலபிஷேகம்
எழுத்தின் அளவு:
பஞ்சவடியில் டிச.19ல் அனுமன் ஜெயந்தி; 2,000 லிட்டர் பாலபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 டிச
2025
11:12

சென்னை: விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி – திண்டிவனம் நெடுங்சாலையில், பஞ்சவடி திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு, வலம்புரி மஹா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், டிச.,19ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. முதலாவதாக, பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, மஹா சங்கல்பம், அங்குரார்ப்பணம் மற்றும் வாஸ்து சாந்தி என பூஜைகள் நேற்று மாலை துவங்கின. இன்று முதல், டிச.,18ம் தேதி வரை, ஆறாம் காலம் முடிய, ஒவ்வொரு காலத்திலும், புண்யாஹவாசனம், பஞ்சஸுக்த ஹோமம், மூலமந்த்ர ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, லட்சார்ச்சனை நடக்க உள்ளன. ஏழாம் கால பூஜை, வரும் 19ம் தேதி காலை முடிவடையும். அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி, டிச., 19ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, தனுர் மாத பூஜைகள் நடக்கும். காலை 6:00 மணிக்கு மேல் யாக சாலையில் ஏழாம் கால பூஜை நடக்கும். காலை 8:30 மணிக்கு, 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு, 2,000 லிட்டர் பாலபிஷேகம் நடக்கும். அலங்காரத்துக்கு பின், ஆஞ்சநேயருக்கு 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை சாற்றப்படுகிறது. அதன்பின், தாமல் ராமகிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழி நடக்கிறது. காலை 10:00 மணி முதல் தெய்வீக இசை கச்சேரி நடக்கிறது. பின், மதியம் 12:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு திருவாராதனம் நடைபெறும். ஜெயந்தி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு, ஜெயமாருதி சேவா ஏற்பாட்டின்படி, சிறப்பு அன்னதானம் அளிக்கப்படுகிறது; சிறப்பு பிரசாதமும் வழங்கப்படும். மாலை 4:00 மணிக்கு மேல், பாலமுருகன், குமரன் குழுவினரின் மங்கள இசையுடன், ராமர் – சீதா கல்யாணம் நடக்கிறது. இத்தகவல்களை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், உப தலைவர் யுவராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar