Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமத்தம்பட்டியில் அய்யப்ப சுவாமி ... அறநிலையத்துறை அதிகாரிகளை உள்ளே விட மாட்டோம் என கோவில் முன் திரண்ட மக்களால் பரபரப்பு அறநிலையத்துறை அதிகாரிகளை உள்ளே விட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை துவக்கம்
எழுத்தின் அளவு:
மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை துவக்கம்

பதிவு செய்த நாள்

18 டிச
2025
05:12

தொண்டாமுத்தூர்; கோவையில், மஹா சிவராத்திரி விழாவிற்கு, மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஆதியோகி ரத யாத்திரையை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஈஷா யோகா மையம் மற்றும் தென் கைலாய பக்தி பேரவை இணைந்து ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரையை, ஈஷா யோகா மையம், தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழகத்தின் பாரம்பரிய ஆதினங்கள் நடத்துகின்றன. இம்முறை, 250க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரதம் பயணிக்க உள்ளது. இந்த ரதங்கள், மஹா சிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 30 ஆயிரம் கி.மீ., பயணிக்கவுள்ளது. இந்த ரத யாத்திரையின் துவக்க விழா கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள ஆதியோகி முன்பு நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு ஆதியோகி ரதங்களை துவக்கி வைத்தனர்.


இவ்விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் பேசுகையில்,"வெள்ளியங்கிரி மலை, தென் கயிலை என போற்றப்படுகிறது. கைலாயம் செல்வது உடலாலும், பொருளாலும் கடினமான காலத்தில், எளிய முறையில் கைலாய நாதனை தரிசிக்க வழி காட்டுவது இந்த தென் கையிலை மலை. அந்த மலையின் அடிவாரத்தில் யோக முகத்துடன் ஆதியோகி எழுந்தருளியிருப்பது பேரருளாகும். 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் தலங்கள் தோறும் சென்று மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அதுபோலவே, இன்றைக்கு இந்த ஆதியோகி ரதங்கள் இல்லங்கள் தோறும் எழுந்தருளி மக்களை ஆன்மிக செந்நெறிக்கு அழைக்கின்றன. ஆற்று நீர் கடலை நோக்கி செல்லும் போது, மீன்கள் எதிர்நீச்சல் போட்டு மேலே வருவது போல, இங்கிருந்து புறப்படும் இந்த ரதங்கள், மக்களை மஹா சிவராத்திரி பெருவிழாவை நோக்கி, ஈஷா யோக மையத்துக்கு அழைத்து வரக்கூடிய உன்னத பணியை செய்கின்றன. திருஞானசம்பந்தர் காலத்தில் நடந்த நெறியை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஆன்மிக இயக்கமாக இந்த ரத யாத்திரை விளங்குகிறது,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar