Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி அமாவாசை: பேரூர் நொய்யல் ... இலையூர் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவிலில் மரகத லிங்கம் திருட்டு இலையூர் பழமை வாய்ந்த காசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்: 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்: 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

19 டிச
2025
11:12

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.


புதுச்சேரி – திண்டிவனம் சாலையில், பஞ்ச வடீயில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா, கடந்த 15ம் தேதி மாலை அனுக்ஞை , மகா சங்கல்பம், புண்யா ஹவாசனம் மற்றும் வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. நான்காம் நாளான நேற்று காலை 5ம் காலயாக பூஜையும், மாலை 6ம் கால யாக பூஜை, புண்யாஹ வாசனம், பஞ்சஸூக்த ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, சாற்று முறை, லட்சார்ச்சனை நடந்தது. இன்று, அனுமன் ஜெயந்தியையொட்டி, காலை 7:00 மணிக்கு யஜமான மகா சங்கல்பங்கள், புண்யாஹவாசனம், பஞ்சஸூக்த ஹோமம், மூலமந்திர ேஹாமம், லட்சார்ச்சனை பூர்த்தி நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களுடன், மூலவரான 36 அடி உயர ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, ஏழாம் காலயாக பூஜை பூர்த்தியாகி கடம் புறப் பாடாகி, கோவிலை வலம் வந்து அபிஷேகம் நடைபெற்றது. பின், சுவாமிக்கு அலங்காரத்திற்கு பின், ஆஞ்ச நேயருக்கு 130 கிலோ ஏலக்காய் மாலை சாற்றப்பட்டு, புஷ்ப விருஷ்டி வேத கோஷம், சோடச உபசாரம் நடந்தது. முன்னதாக காலை 10:00 மணி முதல் தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் மற்றும் முரளி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு யாழ்ப்பாணம் பாலமுருகன் மற்றும் குமரன் குழுவி னரின் மங்கள இசையுடன், சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar