கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பகல் பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளில் பெருமாள் மோகினி அவதாரத்தில் உலா வந்தார்.
நிறைவு நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு பெருமாள் கொண்டையிட்டு, மோகினி அலங்காரத்தில் கிளி மாலையுடன் உலா வந்தார்.
இக்கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளதால், நித்திய பரமபதத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார்.
இதனால் நேற்று மாலை மோகினி அவதாரத்தில் சுற்றி வந்த பெருமாள் கோயிலை அடைந்தவுடன் மாலை 6:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று காலை சிறப்பு தீபாராதனைகள் நடந்து, மீண்டும் 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.