Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடராஜர் ... உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்; மரகத நடராஜருக்கு புதிய சந்தன காப்பிட்டு பூஜை உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; ஆடல் வல்லானுக்கு 32 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; ஆடல் வல்லானுக்கு 32 வகை அபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
10:01

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆடல் வல்லானுக்கு 32 திரவியங்களில் அபிஷேக ஆராதனையுடன் ஆருத்ரா தரிசன பெருவிழாவில் கொட்டும் பனியிலும் ஏராளமான பக்தர்கள் சிவாய நம கோஷத்துடன் வழிபட்டனர்.


அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகும்.காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இந்த கோவிலில் ஆருத்ரா தரிசன பெருவிழாவை முன்னிட்டு ஆடல்வல்லானான நடராஜா பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்று ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25ம் தேதி ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் திருவாதிரை நாச்சியார் காப்பு கட்டுடன் துவங்கியது. நாள்தோறும் திருவெம்பாவை உற்சவத்துடன் மாணிக்கவாசகர் திருவீதி உலா நடைபெற்று வந்தது.


நேற்று திருவாதிரை அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் மற்றும் மாங்கல்ய நோன்பு பூஜை நடைபெற்றது. இன்று ஆருத்ரா தரிசன நாளை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் நடராஜப் பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு விபூதி, சந்தனாதி தைலம்,நெய்,பஞ்சகவ்யம்,நெல்லி பொடி, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, வில்வ பொடி,பஞ்சாமிர்தம், மாதுளை, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா பழச்சாறுகள் உள்ளிட்ட 32 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் நான்கு வேதங்களும் பாராயணம் செய்யப்பட்டது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க,கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் ஓதுவா மூர்த்திகள் தேவாரப் பாடல்கள் பாட அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் சாமி பட்டி சுற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் நான்கு ரத திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் கொட்டும் பணியில் காத்திருந்து பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரளாக வந்து இறைவனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar