Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை ஐயப்பன் கோயிலில் மண்டல ... தர்ம சாஸ்தா மகோத்சவம்: கோவை ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி தர்ம சாஸ்தா மகோத்சவம்: கோவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா: பாரம்பரியத்துடன் கொண்டாடும் படுக இன மக்கள்
எழுத்தின் அளவு:
நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா: பாரம்பரியத்துடன் கொண்டாடும் படுக இன மக்கள்

பதிவு செய்த நாள்

05 ஜன
2026
05:01

குன்னூர்; குன்னூரில், கைகாரு சீமையின் ஹெத்தையம்மன், திருவிழாவின் நடைபயணம் துவங்கியது.


நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழாவை, 48 நாட்கள் கொண்டாடுகின்றனர். மாவட்டத்தில் முக்கிய 4 சீமைகளில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அம்மனின் சக்தியாக கருதப்படும், ஹெத்தைதடியை, விரதத்தில் உள்ள ஹெத்தைக்காரர்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். ஹட்டிகள் வழியாக செல்லும் போது, படுக மக்கள் தங்களது பாரம்பரியம் மாறாமல், வெள்ளை உடை அணிந்து, தரையில் விழுந்து வணங்குகின்றனர். மடிமனையில் ஹெத்தைக்காரர்கள் தங்குகின்றனர். ஹெத்தையம்மன் திருவிழாவில், அருள்வாக்கு கூறுதல், காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகளில் படுக இன மக்கள் பங்கேற்று அம்மனை வழிபடுகின்றனர்.


கோத்தகிரி பேரகணியில், 7ம் தேதி ஹெத்தை திருவிழா கொண்டாப்படுகிறது. இதனால் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜெகதளா காரக்கொரை மடிமனை ஹெத்தையம்மன் கோவிலில் 9ல் குண்டம் திருவிழா, 12ம் தேதி ஜெகதளாவில், ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது. குன்னூரில், கைகாரு சீமையில், 19 ஹட்டிகளை சேர்ந்த படுக இன மக்களின் திருவிழா துவங்கியது. இன்று எடப்பள்ளியில் இருந்து காத்துக்குளி மடிமனைக்கு, 24 ஹெத்தைக்காரர்கள், 13 கி.மீ., தூரம் நடை பயணத்தை துவக்கினர். எடப்பள்ளி, இளித்தொரை, பெட்டட்டி உள்ளிட்ட ஹட்டி மக்கள் வரவேற்பு அளிதது, தரையில் விழுந்து வணங்கினர். மடிமனையில் தங்கும் இவர்கள் 12ம் தேதி ஹெத்தை பண்டிகை முடித்து திரும்ப உள்ளனர். இதனால் நீலகிரியில் ஹெத்தை திருவிழா களைகட்டி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar