Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திம்மராஜம்பேட்டை கோவிலில் ... அரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா ‘கோவிந்தா’ கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம் அரங்கநாத பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.87 லட்சத்தில் புனரமைப்பு பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.87 லட்சத்தில் புனரமைப்பு பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2026
01:01

வாலாஜாபாத்: தம்மனுார், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், 87 லட்சம் ரூபாயில் புனரமைப்புக்கான பணிகள் நேற்று துவங்கப்பட்டன.


வாலாஜாபாத் வட்டாரம், தம்மனுாரில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.


இக்கோவில் நிர்வாக சீர்கேடு காரணமாக, 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது.


மேலும், கோவில் கட்டடம் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு, விமான கோபுரம் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் சிதிலம்அடைந்துள்ளது.


எனவே, இக்கோவிலை புதுப்பித்து கும்பாபி ஷேகம் செய்ய அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


அதையடுத்து, இக்கோவிலில் திருப்பணி மேற்கொள்ள அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 87 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


அதை தொடர்ந்து, கோவில் திருப்பணி துவக்க கடந்த ஆண்டு, ஜூ லை மாதம் பாலாலயம் நடைபெற்றது.


எனினும், பாலாலயம் முடிந்தும் அடுத்த கட்டப் பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது.


திருப்பணி செய்ய கோரிய டெண்டர் சில காரணங்களால் ரத்தானதாகவும், பின், ஒப்பந்த புள்ளிக்கான பதிவில் பொதுப்பணித் துறை சார்ந்த அதிகாரி மற்றும் பணி மேற்கொள்ளும் ஸ்தபதிகள் பெயர் பதிந்து மறு டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.


இந்நிலையில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி ஊராட்சி நிர்வாகிகள், பக்தர்கள், பொது மக்கள் முன்னிலையில் கோவில் கட்டுமானத்திற்கான திருப்பணி பல்வேறு பூஜைகளுடன் நேற்று காலை துவங்கப்பட்டன. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar